tamilnadu

img

ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்கள் நிறுத்தம்-  ப.சிதம்பரம் கடும் கண்டம்

ரிசர்வ் வங்கியின் 7.75 சதவீத பத்திரங்களை மத்திய அரசு திடீரென்று நிறுத்தி உள்ளது. மோடி அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்களை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 2003ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் பத்திரம் அத்தகைய சாதனமாக இருந்து வந்தது. பொது வைப்பு நிதி (PPF), சிறு சேமிப்பு ஆகியவற்றின் வட்டியை அரசு குறைத்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி பத்திரங்களை அறவே ஒழித்துவிட்டது. இது நடுத்தர மக்களின் மீது விழுந்துள்ள இன்னொரு பலத்த அடி.
கடந்த 2018 ஜனவரியில் இதைச் செய்தார்கள். நான் கண்டனம் தெரிவித்தேன். மறுநாளே அரசு தன் நடவடிக்கையை விலக்கிக் கொண்டது. இப்பொழுது மீண்டும் ரத்து செய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். சமூக வலைத்தலங்களில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள். இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.