tamilnadu

img

சொந்த ஊர் கொண்டு வரக் கோரி ஜெயங்கொண்டத்தில் உறவினர்கள் மறியல்

அரியலூர், ஆக.31- ஜம்மு - காஷ்மீரில் பயங்கர வாதிகளால் கொல்லப்பட்ட தமி ழக ராணுவ வீரரின் உடலை சொந்த ஊரான ஜெயங்கொண் டம் கொண்டு வரக்கோரி அவ ரது உறவினர்கள் மறியல் போராட் டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் வீரமணி(32), கடந்த பத்து ஆண்டுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு திரு மணமானது. குழந்தை இல்லை. இவரின் மனைவி, சென்னை துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். வீரமணி, தில்லி ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வீரமணி, ஜம்மு -காஷ்மீருக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போது பயங்கர வாதிகளால் கொல்லப்பட்டார். அவரது உடல் தில்லி கொண்டு வரப்பட்டது. அவரின் உடலை அடையாளம் காட்ட ஜெயங்கொண்  டத்தில் இருந்து உறவினர்கள் தில்லி சென்றனர். அவர்கள் இறந்தவர் வீரமணி தான் என்பதினை உறுதி செய்தனர். இந் நிலையில், அவரது உடலை சொந்த ஊரான ஜெயங்கொண் டம் கொண்டு வரக் கோரி வெள் ளிக்கிழமை இரவு ஜெயங்கொண் டம் நான்கு ரோட்டில் வீரமணி யின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், மறி யலில் ஈடுபட்டவர்களிடம் உரிய ஏற்பாடுகள் செய்ய அரசிடம் பரிந் துரை செய்வதாக கூறியதின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.