சென்னை, செப்.1- தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரயில்வேக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்குமேல் வருமானம் கிடைத்துள்ளது. ரயிலில் கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகளின் வசதிக்காக தட்கல் முறை யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை கடந்த 1997 ஆம் ஆண்டு தொடங்க ப்பட்டது. அப்போது குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் அமல்படுத்தப்பட்ட இந்த முறை 2004 ஆம் ஆண்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ரயில்களில் 2 ஆம் வகுப்புக்கான அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதமும், மற்ற அனைத்து வகுப்பின ருக்கும் 30 சதவீத அடிப்படை கட்டணமும் அதிபட்ப மற்றும் குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு பிரீமியம் தட்கல் டிக்கெட் முன் பதிவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 50 சதவீத தட்கல் ஒதுக்கீடு டிக்கெட்டுகள் டைனமிக் கட்டண முறையைப் பயன்படுத்தி விற்கப்படு கின்றன.
இந்நிலையில் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரயில்வேக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்குமேல் வருமானம் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர். இந்த கட்டணம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு அளித்த பதில் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 2016 முதல் 2019 வரையிலான 4 ஆண்டு களில் தட்கல் டிக்கெட்டு களிலிருந்து ரூ.21,530 கோடியும், பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளிலிருந்து கூடுதலாக ரூ.3,862 கோடி என மொத்தம் ரூ.25,392 கோடி கிடைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்ப ட்டுள்ளது. ரயில்வே புள்ளி விவரங்களின்படி தட்கல் திட்டம் தற்போது 2677 ரயில்க ளில் உள்ளது. இம்முறை யில் 1 லட்சத்து 71 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்ப ட்டுள்ளது.