tamilnadu

விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி....

புதுதில்லி:
தரையில் இருந்து ஏவினால் வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றியடைந்துள்ளது.கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக ஏவுகணை ஏவப்பட்டதில் மீண்டும் வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியது. ஏவுகணை சோதனை 2 முறையும் வெற்றி அடைந்ததற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.