tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்: காவல்துறை துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புப் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.  

 குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும்,  தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுதும் விஸ்தரிப்பதற்கு எதிராகவும், வியாழனன்று அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்தன.  
கர்நாடக மாநிலம் பெங்களூரு, மங்களூரு ஆகிய இடங்களில் வியாழனன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு போராட்டங்கள் நடைபெற்றன. பெங்களூரு டவுன்ஹால் பகுதியில் போராட்டத்தில் கலந்துகொண்ட வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டங்களை ஒடுக்கும் வகையில்  பெங்களூரு மற்றும் மங்களூரு பகுதிகளில் காவல்துறையினர்  ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.   இதையடுத்து போராட்டத்தை கடுப்படுத்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதேபோல் உத்தரபிரதேசத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து  லக்னோவை தவிர்த்து ஹாசியாபாத், பிலிபித், சாம்பால், பாரேய்லி மற்றும் மீரட் உள்ளிட்ட பகுதிகளிலும் இணை சேவை முடக்கப்பட்டது. தொடர்ந்து, லக்னோவில் சனிக்கிழமை நண்பகல் வரை இணையம் தடைசெய்யப்பட்டுள்ளது. லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் மீது குண்டு பாய்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.