tamilnadu

‘சவுகிதார், திருடன்தான்!’ ராகுல் மீண்டும் அதிரடி

புதுதில்லி, மே 2 -சவுகிதார் மோடி திருடன் தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார். என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:பிரதமர் மோடி, ஊழலற்றவர், அப்பழுக்கற்றவர் என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வந்த தகவல்படி 67 சதவிகித இந்திய மக்கள் ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக நம்புகின்றனர். சவுகிதார் திருடன்தான் என்பதை மீண்டும் சொல்கிறேன். நான் முன்னர் உச்ச நீதிமன்றமே சொன்னதாக தெரிவித்தது தவறு. அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், மோடி மற்றும் பாஜக-விடம் நான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. மோடி திருடன்தான். பிரதமர் மோடி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவார் என்று சொன்னார். விவசாயிகளுக்கு பல நலத் திட்டங்களை செய்வதாக சொன்னார். ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவார் என்றார். இன்று எதைப் பற்றியும் அவர் பேச முடியாது. நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.