tamilnadu

img

தனியார் கையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்.... பீகார் தேர்தல் நேர்மையாக நடக்குமா? தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சீத்தாராம் யெச்சூரி புகார்

புதுதில்லி:
பீகார் சட்டமன்றத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திட மூன்று பிரச்சனைகள் மீது தேர்தல் ஆணையம் தீர்வு காண வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார்.

இது தொடர்பாக, தலைமைத்தேர்தல் ஆணையர் அரோராவிற்கு, சீத்தாராம் யெச்சூரி எழுதியுள்ளகடிதத்தில் கூறியிருப்ப தாவது:சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் பீகார் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக 2020 ஆகஸ்ட் 17 அன்று சில முன்மொழிவுகளைத் தங்களுக்கு எழுதியிருந்தது தொடர்பாக தங்களின் கவனத்திற்கு அவற்றை மீண்டும் கொண்டுவருகிறேன். நாங்கள் எழுதியிருந்த விஷயங்கள் குறித்துதங்களிடமிருந்து எவ்விதமான பதிலும் எங்களுக்கு வரவில்லை. பின்னர் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் செப்டம்பர் 25 அன்று ஒரு விவரமான தகவல்களையும், கட்டளை களையும் பிறப்பித்துள்ளது.தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு, இந்தக் குறிப்புகளுடன்,  மேலும்மூன்று முக்கியமான பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று  கருதுகிறேன்.

தேர்தல் நிதி
முதலாவது பிரச்சனை, தேர்தல் நிதி சம்பந்தப்பட்டது. குறிப்பாக தேர்தல் நிதி பத்திரம் தொடர்பானது.எங்களுக்குத் தெரிந்ததைப் போன்றே உங்களுக்கும் நன்கு தெரியும் என்றே நினைக்கின்றேன். முன்பு, தேர்தல் ஆணையமானது உச்சநீதிமன்றத்தில், “தேர்தல் நிதிப் பத்திரங்கள் அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மையுடன் இருந்த அம்சங்கள் மீது ஆழமான அளவில்விளைவுகளை ஏற்படுத்தியிருக் கிறது,” என்று கூறியிருந்தது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக பெறப்படும் நன்கொடைகள், 2017 நிதிச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்ததன் மூலமாகவும், அதனைத் தொடர்ந்து வருமான வரிச் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவந்தும் தேர்தல் நிதியார் அளித்தது என்று வெளிச்சத் திற்கு வரமுடியாத வகையில் செய்யப்பட்டுவிட்டது என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தது. 

“தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக நன்கொடைகள் பெற்ற விவரங்கள் வெளிப்படுத்தாத நிலையில், அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடைகள் குறித்து கூறுவனவற்றை மட்டும் வைத்து, அந்தக் கட்சியானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29-பி பிரிவினை மீறியிருக்கிறதா என்று உறுதிப்படுத்திட முடியாது,” என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த உறுதிவாக்குமூலத்தில்  குறிப்பிட்டி ருந்தது.மேலும் தேர்தல் ஆணையம் அந்த உறுதிவாக்குமூலத்தில், இவ்வாறு செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், உண்மையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் 2014ஆகஸ்ட் 29 தேதியில் அளித்திருந்த வழிகாட்டுதல்களை தடம்புரளச்செய்திருக்கின்றன என்றும் (இந்தகடிதத்தில் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் அனைத்தும் தாங்கள் பெற்ற நன்கொடைகள் தொடர்பாக, தங்களுடைய தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளிலும், தேர்தல் செலவினம் தொடர்பான ஸ்டேட்மெண்டிலும் தெரிவித்திட வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது) குறிப்பிட்டி ருந்தது.

2017 நிதிச் சட்டம், 1951, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமான வரிச் சட்டம், கம்பெனிகள் சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்திருந்தது. மேலும், 2016 நிதிச்சட்டத் திலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் குறித்தும் தேர்தல் ஆணையம் தன்னுடைய உறுதிவாக்குமூலத்தில் விமர்சனங் களைச் செய்திருந்தது. குறிப்பாக, 2010ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்பு (முறைப்படுத்தல்) சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், இந்தியாவில் உள்ள கம்பெனிகளில் அதிக அளவில் பங்குகள் வைத்துள்ள வெளிநாட்டுக் கம்பெனிகள் நன்கொடைகள் அளிப்பதற்கு அனுமதித்துள்ளன. “இது, வெளிநாடுகளிலிருந்து எந்த விதத்திலும் நன்கொடைகள் வாங்குவதைத் தடை செய்திருந்த முந்தைய சட்டத்திலிருந்து ஒரு மாற்றமாகும். இது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் வெளிநாடுகளிலிருந்து நன்கொடைகள் பெறுவதை எவ்விதத்திலும் 

தொடர்ச்சி 3ம் பக்கம்...