புதுதில்லி:
வாக்குச் சீட்டுகள் மூலம் மீண்டும் மக்களவைத் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு, மனோகர்லால் சர்மா என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை; வாக்குச் சீட்டு மூலம் மட்டுமே தேர்தலை நடத்த முடியும் என்று மனுவில் அவர் கூறியுள்ளார்.