மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுதில்லி,டிச.24- மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடி யுரிமை சட்டத்திருத்தத்திற்கும் தேசிய மக் கள் தொகை பதிவேட்டிற்கும் எதிர்க்கட்சி களும் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வரு கின்றன. இந்நிலையில் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை நாடு முழுவதும் விரிவு படுத்தும் திட்டத்திற்கு பாஜக அரசின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது. இதன்படி ஒவ்வொரு குடிமகன் குறித்த முழுமையான விவரங்கள் சேக ரிக்கப்பட்டு வகைப்படுத்தப்படும். இதற் கான கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து துவங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) மேம்படுத்திட ரூ.3941.35 கோடி யும், அசாம் தவிர்த்து 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை என்பிஆர் அடிப்ப டையில் மேற்கொள்ள ரூ.8754.23 கோடியும் ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் 6 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமான காலம் வசிப்பவர்கள் இயல்பான குடிமகனாக கருதப்பட்டு பதிவேட்டில் இடம் பெறுவர். இதில் பதிவு செய்வது கட்டாயமாகும். தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல் படுத்தப் போவதில்லை என்று கேரளா, மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளன.