tamilnadu

img

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2022-க்குள் கட்டி முடிக்க திட்டம்

வெறும் ரூ.5 கோடி ஒதுக்கி மத்திய அரசு தகவல்

புதுதில்லி,நவ.29- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை  2022 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று  மத்திய அரசு  தெரிவித்துள்ளது. ஆனால் ரூ.1,264 கோடி  மதிப்பிலான மருத்துவமனைக்கு முதற்கட்ட நிதியாக வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2015 பிப்ரவரி மாதத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்  அருண் ஜெட்லி, எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங் களில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.  கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தில்லியில் இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையை தமி ழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியது. 

எய்ம்ஸ் மருத்துவமனை  ரூ.1,264 கோடி  மதிப்பில் 200 ஏக்கரில் தோப்பூரில் அமைய வுள்ளது. இதில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை, 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாகவும், படிப்பதற்கான வசதி களும் ஏற்பாடு செய்யப்படும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்காக ரூ.5 கோடி முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.