tamilnadu

img

6 நாட்களில் 2 ரூபாய் உயர்ந்தது!

புதுதில்லி:
பெட்ரோல் - டீசல் விலையை, இந்திய எண் ணெய் நிறுவனங்கள், நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. கச்சாஎண்ணெய்யின் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்பவே விலையை மாற்றியமைப்பதாகவும் கூறி வருகின்றன.இந்நிலையில், கடந்த6 நாட்களில், லிட்டருக்கு 2 ரூபாய் அளவிற்கு, பெட்ரோல் - டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.திங்களன்று மட்டும் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துஒரு லிட்டர் 76 ரூபாய் 83 காசுகளுக்கு விற்பனையானது. டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து 70 ரூபாய் 76 காசுகளுக்கு விற்பனையானது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 98 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 61 காசுகளும் உயர்ந்துள்ளன.சவூதி அரேபிய எண் ணெய் நிறுவனங்கள் மீது, அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைஉயர்ந்துள்ளதாக கூறப் படுகிறது.சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா, அதிகஅளவில் கச்சா எண் ணெய் இறக்குமதி செய்துவரும் நிலையில், இந்த விலை உயர்வானது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது.