புதுதில்லி,அக்.17- ஐஎன்எக்ஸ் மீடியா முறை கேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்ப ரத்தை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக் கத்துறைக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐ.என்.எஸ் மீடியா முறை கேடு வழக்கில் ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப் பட்டு தில்லி திகார் சிறையில் உள்ள சிதம்பரத்தை, அந்த முறைகேட்டில் நடைபெற்ற பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை புதனன்று கைது செய்தது.