tamilnadu

img

குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 பேராக அதிகரித்துள்ளது. இதில்குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரத்து 710 பேராகவும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 248 பேராகவும் உயர்ந்துள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 573 பேராக  அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 53.79 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 13 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டனர். 336 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;