tamilnadu

img

நிதிஆயோக் தலைமை செயல் அதிகாரியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு 

நிதிஆயோக் தலைமை செய்ல அதிகாரியின் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014ல் ஆட்சி அமைத்த பின்  நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் மத்திய திட்ட கமிஷன் என்ற அமைப்பு கலைக்கப்பட்டு  புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிதி ஆயோக்  உருவாக்கப்பட்டது. 
இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் கண்ட் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.