tamilnadu

img

‘நிதி ஆயோக்’கிலும் அமித்ஷா!

புதுதில்லி:
மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான ‘நிதி ஆயோக்’கை மறு சீரமைப்பு செய்வதற்கு ஜூன் 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்படி, ‘நிதி ஆயோக்’ தலைவராக மோடி செயல்படுவார்; துணைத் தலைவராக ராஜிவ் குமார் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமித் ஷா, புதிதாக ‘நிதி ஆயோக்’ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், நிதின் கட்காரி, பியூஷ் கோயல் ஆகியோரும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

;