புதுதில்லி:
நிர்பயா வழக்கில் திறமையாக வாதாடி, குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்க காரணமானவர் உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சீமா குஷ்வாகா. இந்நிலையில், ஹத்ராஸ் தலித் பெண் வழக்கிலும் இவரே ஆஜராவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. “இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரிழந்தது தொடர்பாக,அவரது குடும்பத்தினர் என்னை ஹத்ராஸூக்கு அழைத்துள்ளனர், நான் அவர்களின் சட்ட ஆலோசகராக நிற்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், உ.பி. அரசு, சட்டம் - ஒழுங்கு நிலைமையை பாதிக்கும் என்று கூறி, அவர்களைச் சந்திக்கஎன்னை அனுமதிக்கவில்லை” என்று சீமா குஷ் வாகா கூறியுள்ளார்.