tamilnadu

img

கடற்படை ஜெட் விமானம் விபத்து

பனாஜி:
இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக்-29கே ரக ஜெட் விமானம் கோவா அருகே விபத்துக்குள்ளானது. கோவா அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காலை10.30 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையென்றும், விமானியும் பாராசூட் மூலம் குதித்து பாதுகாப்பான முறையில் உயிர்தப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. விபத்து குறித்துவிசாரணைக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கோவா அருகே கிராமப் பகுதியில் மற்றொரு மிக்-29கே ரக விமானம் விபத்துக்குள்ளானது.

;