tamilnadu

img

மசூதியில் குண்டு வெடிப்பு... ஆப்கானிஸ்தானில் 4 பேர் பலி

காபூல்
இந்தியாவுடன் குறுகிய எல்லைப்பகுதியை கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் எழுச்சி பெற துவங்கியுள்ளது. தினமும்  500-கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதால் மொத்த பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது, இதுவரை 446 பேர் பலியாகியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 928 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.    

இந்நிலையில் கொரோனா பதற்றத்துக்கு இடையே தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளியன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையின் திடிரென குண்டுவெப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும்  பொறுப்பேற்கவில்லை.

;