tamilnadu

img

எங்கு ஓடி ஒளிந்தாலும் மோடி தப்பிக்க முடியாது! விடாமல் விரட்டும் ராகுல் காந்தி

புதுதில்லி, ஏப். 8 -

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது நெறியாளர்கள், ‘ரபேல் விவகாரத்தில் அம்பானி பலனடைந்தாரா?’ என கேள்வியைஎழுப்பினர்.இதனை சற்றும் எதிர் பாராத பிரதமர் மோடி, கடும்கோபமடைந்தார். “நீங்கள் உச்சநீதிமன்றத்தை நம்ப மாட்டீர்கள், சிஏஜி-யை நம்ப மாட்டீர்கள், நீங்கள் மிகவும் ஒரு தலைபட்சமாக செயல் படுவீர்கள்; அப்படித்தானே” என்று கேள்விகேட்ட நெறியாளர்களிடம் பொறிந்து தள்ளிவிட்டார்.இந்நிலையில், கோபம் கொப்பளித்த மோடியின் இந்த வீடியோவை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “பிரதமர் மோடி,கேள்விக்கு பதில் சொல்லாமல் நீங்கள் ஓடலாம், ஆனால்ஒளிய முடியாது: உங்கள்கர்மா உங்களை பிடித்துவிடும்; உண்மை வலிமையானது” என்று கூறியுள்ளார்.அத்துடன், ஊழல் தொடர்பாக தன்னுடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று மீண்டும் மோடிக்கு, ராகுல் சவால் விடுத்துள்ளார்.

;