புதுச்சேரி கல்வி அமைச்சர் நடந்து சென்றபொழுது அவரது மொபைல் போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவரது அமைச்சரவையில் கமலக்கண்ணன் கல்வி அமைச்சராக இருந்து வருகிறார். அவர் புதுச்சேரி பீச் சாலையில் நேற்றிரவு தனது மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார்.
அவர் பெட்ரோல் பம்ப் ஒன்றின் அருகே சென்றபொழுது, அந்த வழியே வேகமுடன் வந்த பைக் ஒன்று அவரருகே சென்றது. திடீரென பைக்கில் இருந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அமைச்சரிடம் இருந்து மொபைல் போனை பறித்து கொண்டு சென்றனர்.
இதுபற்றி ஒடியன்சாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தி தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.