tamilnadu

img

பெரும்பான்மை வாதம் தேசியவாதம் அல்ல.... வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் கருத்து

புதுதில்லி:
பெரும்பான்மைவாதம் தேசியவாதம் அல்ல என்றுபுகழ்பெற்ற வரலாற்றா சிரியர் பேராசிரியர் ரொமிலா தாப்பர் கூறினார்.தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பானகர்வான், வியாழக்கிழமை யன்று, முகநூல் நேரலை மூலமாக நடத்திய அமர்வில்
ரொமிலா தாப்பர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறிய தாவது:

தேசியவாதம் என்பது சமூகத்தில் உள்ள மக்கள்கூட்டாக எப்படி சிந்திக்கிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதாகும்.  கூட்டாக என்பதன் பொருள் சமூகத்தில் உள்ள, நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் சம அந்தஸ்துடனான பிரஜைகளாகக் குறித்திடும். ஆனால்தேசியவாதம் என்பது ஒருகுறிப்பிட்ட ஒற்றை அடையாளத்தால் வரையறுக்கப் படும்போது, அது மொழியாக இருந்தாலும் சரி,அல்லது மதமாக இருந்தா லும் சரி அல்லது இனமாக இருந்தாலும் சரி, தேசியவாதம் என்பது பெரும்பான்மைவாதம் என்பதற்குள் தடம்புரண்டுவிடும். பெரும்பான்மைவாதம் தேசிய வாதம் அல்ல. சுதந்திரத் திற்கான போராட்டம் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தஅனைத்து இந்தியர்களாலும் மேற்கொள்ளப்பட்ட தாகும். எனினும், பிரிட்டிஷார் தலைமையிலான தேசியவாதம் மதத்தின் அடிப்படையில் வரையறுத்த இருதேசக் கொள்கையை இங்கே சிலர்  ஏற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.   (ந.நி.)

;