tamilnadu

img

புல்வாமா தாக்குதலில் முக்கியக் குற்றவாளி கைது

புதுதில்லி, பிப்.29-  மத்திய பாஜக அரசின் ஆட்சிக் காலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி கள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் மக் கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.  இந்நிலையில் தாக்குதலை நடத்துவதற்காக காரில் வெடி பொருட்களை நிரப்பி, சம்பவ இடத் துக்கு 500 மீட்டர் தூரத்துக்கு முன்பு வரை ஓட்டி வந்த முக்கிய குற்ற வாளி ஷகிர் பஷீர் மாக்ரே என்ப வரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் புல்வாமா மாவட்டம் காகபோரா பகுதியை சேர்ந்தவர் ஆவார்.