புதுதில்லி:
மத்திய அரசுக்கு அனுசரணையாகவும், பாஜகவினருக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்இதுதொடர்பாக நேரடியாகவே உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளை கேள்விக்குஉள்ளாக்கினார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மீது விமர்சனங்களை எழுப்பினார்.இதற்காக பின்னாளில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்தித்து, தண்டனையையும் பூஷண் எதிர்கொள்ள வேண்டியது வந்தது. எனினும், தன்னுடைய விமர்சனங் களில் உண்மை இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார். மேல்முறையீட்டுக்கும் சென்றுள்ளார்.இவ்வாறு உச்சநீதிமன்றத்தால் சலுகை அளிக்கப்படும் நபர்களில்- இந்துத்துவா பேர்வழி அர்னாப் கோஸ்வாமியும் ஒருவர் என்பது நீண்டகாலமாக இருக்கும் கருத்து.உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே, இதுதொடர்பாக அண்மையில் நீதிமன்றத்தின் மீது சந்தேகம் எழுப்பினார். உச்சநீதிமன்ற நிர்வாக தலைவருக்குதனது சந்தேகத்தை கடிதம் வாயிலாகவும் வெளிப்படுத்தினார்.
பாஜக-வுக்கு நெருக்கமான அர்னாப் போன்றவர்களுக்கு காட்டப்படும் சலுகை,ப. சிதம்பரம் போன்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு காட்டப்பட்டது இல்லைஎன்பதை அவர் சுட்டிக்காட்டினார்.எனினும், மும்பையைச் சேர்ந்த கட்டடஉள்வடிவமைப்பாளர் அன்வாய் நாயக்கை(53) தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் ஒரேநாளில் விசாரித்து, எதிர்பார்த்தபடியே அவருக்கு புதனன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.அன்வாய் நாயக்கை, அர்னாப் நேரடியாகதற்கொலைக்குத் தூண்டவில்லை என்றும்நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.பாஜக தலைவர்கள் மற்றும் பாஜகவுக்கு நெருக்கமானவர்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆதரவாக இருக்கின் றன என்ற விமர்சனத்தை, இந்த தீர்ப்பு மேலும் வலுப்படுத்தியது.
இந்நிலையில்தான், பிரபல பாலிவுட்காமெடி நடிகர் குணால் கம்ரா, அர்னாப் ஜாமீன் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.‘நமது நாட்டின் மிக உயர்ந்த உச்சநீதிமன்றம்... மிக உயர்ந்த நகைச்சுவையாகி விட்டது...’ என்றும், ‘தேசிய நலன் கள்’ விஷயங்களில் உச்சநீதிமன்றம் செயல்படும் வேகத்தைப் பார்க்கையில், விரைவிலேயே மகாத்மா காந்தியின் புகைப் படம் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் ஹரிஷ்சால்வே-யின் (அர்னாப் தரப்பு வழக்கறிஞர்) புகைப்படம் வைக்கப்படும் போல தெரிகிறது என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.“நீங்கள் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும்” என்று ஆதித்யா திரிவேதி என்பவர் கம்ராவை எச்சரிக்கை செய்த நிலையில், “நான் நகைச்சுவையை (உச்சநீீதிமன்றத்தை) அவமதித்து விட்டேன் என்று சொல்ல வருகிறீர்களா?” என்றும்அவருக்கு கம்ரா பதிலடி கொடுத்துள்ளார்.மேலும், “முதுகெலும்பு உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றம் அல்லது அதன் நீதிபதிகளைக் குறிப்பிடும்போது ‘மாண்புமிகு’ என்ற முன்னொட்டைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் அதன் மாண்பை இழந்து நீண்டகாலமாகி விட்டது” என்றும் கம்ரா கூறியுள்ளார்.உச்சநீதிமன்றம் காவிமயமாகி விட்டதுஎன்று குறிப்பிடும் வகையில், காவி
நிறத்தில் உச்ச நீதிமன்றம் இருப்பதுபோலபுகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், உச்ச நீதிமன்ற கட்டத்தில்பாஜக கொடி பறப்பது போல அந்த புகைப்படத்தை அமைத்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பர
பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த காமெடி நடிகர் குணால் கம்ராமீது வழக்கு தொடர்ந்து அவரைத் தண்டிக்கவேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.குணால் கம்ராவின் டுவிட்டர் புகைப்படங்கள் நகைச்சுவையின் எல்லையைகடந்துள்ளதாக மத்திய அரசின் அட்டார்னிஜெனரல் கே.கே. வேணுகோபாலும் கருத்து தெரிவித்துள்ளார். கம்ரா மீது, நீதிமன்ற அவமதிப்பு மீது வழக்கு தொடருவதற்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.