tamilnadu

img

மதச்சார்பற்ற இந்தியாவுடன்தான் காஷ்மீருக்கு உறவு.. தற்போது இருப்பது, சிறுபான்மையினர், தலித்துக்களுக்கு எதிரான மோடியின் இந்தியா...

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மக்களின் கண்ணியத்தை, உரிமைகளை அபகரித்து, மத்திய பாஜக அரசு தங் களை அவமதித்து விட்டதாக ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

2019 ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது பிரிவையும், மாநில அந்தஸ்தையும் பறித்து, ஒட்டுமொத்த காஷ்மீரையும் இரண்டுயூனியன் பிரதேசங்களாக மாற்றியமத்திய பாஜக அரசு, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் (NCP) பரூக்அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப் துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவர் மெகபூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முகம்மது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களையும் சிறையில் அடைத்தது.இதில், பிடிபி தலைவர் மெகபூபாமுப்தி ஓராண்டுக்குப் பிறகு, அக்டோபர் 13-ஆம் தேதிதான் விடுதலை செய்யப்பட்டார். அவர் தற்போது, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து, காஷ்மீரின் உரிமைகளை மீட்பது தொடர்பான போராட்டங்கள் குறித்து திட்டமிட்டு வருகிறார்.இந்நிலையில், மெகபூபா செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் கொடி இதுதான் (மேஜையில்வைக்கப்பட்டிருந்த ஜம்மு -காஷ்மீர்கொடியைக் காட்டி..). இந்தக் கொடிமீண்டும் கொண்டு வரப்பட்டால் தான், மூவண்ணக் கொடியை (இந் திய தேசியக் கொடி) ஏற்றுவோம். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி, சிறப்பு அந்தஸ்து மீண்டும்வழங்கப்படாமல் வேறு எந்த கொடியையும் நான் உயர்த்தப் போவதில்லை. ஏனென்றால், காஷ்மீர்கொடிதான், இந்தியாவின் மூவண்ணக் கொடியுடனான எங்களின் உறவை வளர்த்தெடுத்தது. அந்தஅரசியலமைப்பையும் கொடியையும் இழிவுப்படுத்திய பின், எங்களிடம் இருந்து மத்திய ஆட்சியாளர்கள் எதை எதிர்பார்க்கின்றனர்?

தனிக் கொடியுடன் சிறப்பு அரசியலமைப்புச் சட்டம் வழங்கப்பட்டதால்தான், ஜம்மு - காஷ்மீா் இந்தியாவுடன் உறவு பாராட்டி வந்தது. எனவே, எங்கள் சொந்தக் கொடியைத் திரும்பப்பெறும் வரை, நாங்கள் வேறு எந்தக்கொடியையும் உயர்த்த மாட்டோம்.ஜம்மு - காஷ்மீர் மக்களின் கண்ணியத்தை, உரிமைகளை அபகரித்து, மோடி அரசு எங்களை அவமதித்துள்ளது. அரசியல் சட்டம் 370-ஐமீட்பதல்ல என் போராட்டம், காஷ்மீர்பிரச்சனையைத் தீர்ப்பது குறித்ததேஎனது போராட்டம்.அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைத்த பாஜக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, மக்களையும் பிரித்தது. பின்னா் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை இயற்றியது. இதன் பின்னர்தலித்துக்கள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை அபகரிக் கும் என்று எண்ணுகிறேன். 

சுதந்திர, ஜனநாயக, மதச்சார் பற்ற இந்தியாவுடன்தான் எங்களுக்கு உறவு. இன்றைய இந்தியா-வுடன் நாங்கள் சவுகரியமாக இல்லை. சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் பாதுகாப்பற்ற இன்றைய இந்தியாவுடன் நாங்கள் முரண்பட்டுள்ளோம். நாட்டின் அரசியலமைப்பு உள்ள இடத்தில் தனது தேர்தல் அறிக்கையை வைக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால் இது நடைபெறாது.இவ்வாறு மெகபூபா முப்தி கூறியுள்ளார்.