tamilnadu

img

தீர்ப்பு மறு ஆய்வு கோரி  பிரசாந்த் பூஷண் மனு தாக்கல்

புதுதில்லி:
தலைமை நீதிபதியை விமர்சித்த வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்துள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் உச்சநீதிமன்றத்தின்  செயல்பாட்டை விமர்சித்து சமூகசெயற்பாட்டாளரும்  மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த்பூஷண் கருத்து தெரிவித்தது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண்குற்றவாளி என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை நீதிபதியை விமர்சித்த வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்துள்ளார்.