tamilnadu

img

ஜேஎன்யு மாணவர்கள் கைதுக்கு கண்டனம்

புதுதில்லி:
ஜேஎன்யு மாணவர்கள் நடாஷா, தேவன்கானா மற்றும் பிஞ்ச்ரா டோட் ஆகியோர் கைது செய்யப்பட்டி ருப்பதற்கு ஜேஎன்யு மாணவர் பேரவையும், ஜேஎன்யுஆசிரியர் சங்கமும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளன.“தில்லி போலீசார் கோவிட்-19 தொற்று பரவாதிருப்பதற்காக பிறப்பிக் கப்பட்ட சமூக முடக்கத்தை ஒரு கேடயமாகப் பயன் படுத்திக்கொண்டு, ஆட்சிக்கு எதிராகக் கருத்துவேறுபாடு கூறுகிறவர் களைக் கைது செய்திருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரி கிறது,” என்று ஜேஎன்யு மாணவர் பேரவை கூறியுள்ளது.மாணவர்கள் தங்கள் போராட்டங்களில் விழிப்புடனும், வலுவாகவும் இருந்திடவேண்டும் என்று பிஞ்ச்ரா டோட் கேட்டுக்கொண்டிருக் கிறார்.“தில்லி போலீசார் கைது செய்திருக்கும் முறைக்கும்,பல உண்மை அறியும் குழுக்கள் பதிவுசெய்துள்ள வன்முறைகளுக்கும் இடையே முற்றிலும் பொருந்தாத்தன்மை இருப்பதாக,” ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் கூறியிருக்கிறது.(ந.நி.)

;