tamilnadu

img

ஜார்கண்ட்: மின் மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

தொலைபேசி வழியாக, வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களை ஏமாற்றி, அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப்பெற்று, அவர்கள் வங்கிகளில் வைத்திருக்கும் பணத்தைச் சூறையாடும் கும்பல் ஒன்று ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டுவருவதை, நவி மும்பை, ‘சைபர் செல்’ காவல்துறைக் கண்டறிந்துள்ளது.

தொலைபேசி வழியாக, ஏதேனும் ஒரு வங்கியின் பெயரைச் சொல்லி, தாங்கள் அந்த வங்கியின் மேலாளர் என்று கூறி மக்களை ஏமாற்றும் மோசடி என்பது நாளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் பணத்தைப் பறிகொடுத்தவர்கள் அநேகமாக காவல்நிலையம் சென்று புகார் கொடுப்பதில்லை. கொடுத்தாலும் அவர்கள் மீளவும் இழந்த பணத்தை அவ்வளவு எளிதாகப் பெற்றதாகத் தகவல் இல்லை.

இவ்வாறு மோசடி வேலையில் ஈடுபடும் ஒரு கும்பல் ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டுவருவதை, நவி மும்பை, ‘சைபர் செல்’, காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

ரூபாஞ்சலி பருவா (வயது 72) என்ற பெண்மணி தான் இவ்வாறு ஏமாற்றப்பட்ட விவரம் குறித்து கர்கார் காவல்நிலையத்தில் ஜூன் 6 அன்று முறையீடு அளித்தார். அவர் தான் பயன்படுத்தி வந்த டிமார்ட் செயலி (Dmart app) பிரச்சனை செய்ததாகவும், இது தொடர்பாக இணயத்தில் காணப்பட்ட வாடிக்கையாளர் கவனத்திற்கான எண்ணை அழைத்ததாகவும் கூறினார். அந்த எண் ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டுவந்த ஒரு மோசடிக் கும்பலைச் சேர்ந்ததாகும். அந்தக் கும்பல் ரூபாஞ்சலி பருவாவின் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாயை, அவரிடம் வங்கிக்கணக்கையும், ஓடிபி (ஒன் டைம் பாஸ்வார்ட்) எண்ணையும் பெற்று எடுத்துவிட்டது.

“அந்தக் கும்பலின் வங்கிக் கணக்கை ஆராய்ந்தபோது, அது ஜார்கண்ட் மாநிலத்தில் குஞ்ச்போனா என்னுமிடத்தில் இருப்பதாகத் தெரியவந்தது. அந்தக் கணக்கில் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 4.5 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது,” என்று வழக்கை விசாரித்து வரும் காவல் துணை ஆணையர்(குற்றப்பிரிவு), பிரவீண் பட்டீல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஜார்கண்ட் சென்று சாகெல் ஆஜாம் அயூப் அன்சாரி என்பவரைப் பிடித்துள்ளனர். அவனிடமிருந்து 35 டெபிட் கார்டுகள் உட்பட பல விதமான மிஷின்களையும், 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மோசடிக் கும்பலின் தலைவன் இர்ஷத் அன்சாரி (வயது 21) என்பவன் கொள்ளை வழக்கு ஒன்றில் சிறையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவனும், அவனுடைய கூட்டாளிகள் மூவரும் தொலைபேசி வழியாக, மக்களை ஏமாற்றி இவ்வாறு பணம் பறித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

(ந.நி.