tamilnadu

img

கோவிட் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது கட்டாயம்... மீறினால் கடும் நடவடிக்கை: கேரள முதல்வர்...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் கோவிட்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும், அறிவுறுத்தல் களை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் முதல்வர் பினராய் விஜயன் எச்சரித் தார்.

தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகமூடிஅணிவது போன்ற முன்னெச்சரிக்கைகளில் ஒவவொருவரும் கவனமாக இருக்க வேண்டும்என்று முன்னர் கூறப்பட்டது,ஆனால் பலர் அதைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டனர். மக்களிடம் விழிப்புணர்வும், எச்சரிக்கையும் கைவிடப்பட்டுள்ளது. அதனால்தான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஎன்றும் முதல்வர் கூறினார்.

பல இடங்களில், மக்கள் கோவிட் பரவலையும் பாதிப்பையும் லேசாக எடுத்துக் கொண்டிருந்தனர். இது நிலைமையை இன்னும் ஆபத்தானதாக மாற்றியுள் ளது. எனவே, நாட்டைக் காப் பாற்ற அரசாங்கம் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கோவிட்டில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சோதனைகளின் எண் ணிக்கை அதிகரிக்கப்படும்.கோவிட்டிற்கான தடுப்பூசிஇன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோவிட்டிலிருந்து தற்காப்பு வழிமுறைகளால் மட்டுமேதப்பிக்க முடியும். மக்கள் முன் னெச்சரிக்கை வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.கோவிட் எவ்வளவு காலம் நீடிக் கும் என்று தெரியாத நிலையில் நோய் பரவக்கூடிய பகுதிகளை மூட வைக்க முடியாது என்றும் முதல்வர் கூறினார்.மக்கள் சரியான தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடைகளுக்குச் செல்லும்போது முகமூடி அணியவேண்டும். நீங்கள் பொருட்களைத் தொட வேண்டிய கடைஎன்றால், நீங்கள் கையுறைகளை மட்டுமே அணிய வேண்டும். கடைகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியபொறுப்பு கடை உரிமையாளருக்கு உள்ளது. எந்த ஏற்பாடுகளும் செய்யாவிட்டால் கடை மூடப்படும் என்றும் முதல்வர் கூறினார்.