tamilnadu

img

இஸ்லாமியர்க்கு துணைநின்ற தலித் மற்றும் சீக்கிய மக்கள்... குருத்வாராவை திறந்தும், சாலைகளை மறித்தும் பாதுகாப்பு

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், வடகிழக்கு தில்லியில், அவர்கள் மீது சங்-பரிவாரங்கள் திட்டமிட்ட வன்முறையை அரங்கேற்றி வருகின்ற னர். ஜாப்ரா பாத், மவ்ஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக், கர்தம்பூரி, தயால்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த வன்முறையில், பிப்ரவரி 24, 25 ஆகிய 2 நாட்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு, தில்லியில் பல இடங்களில் சீக்கியர்களும் தலித் மக்களும், பாதுகாப்பு அரணாக மாறி, தங்களின் ஒற்றுமை யை வெளிப்படுத்தி இருப்பதாக செய்திகள்வெளியாகியுள்ளன.குறிப்பாக, தில்லியில் அமைந்திருக்கும் சீக்கியர்களின் குருத்வாரா, பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது கதவுகளைத் திறந்து,அடைக்கலம் வழங்கியுள்ளது. அதேபோல சீலம்பூர் உள்ளிட்ட இடங்களில் தலித்மக்கள் சாலைகளை மறித்து இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அரண் அமைத் துள்ளனர்.

;