tamilnadu

img

சேமிப்பில் அதிக கவனம் செலுத்தாத இந்தியர்கள்.... ‘ஸ்கிரிப் பாக்ஸ்’ நிறுவன ஆய்வில் தகவல்

புதுதில்லி:
அக்டோபர் 31ஆம் தேதி சர்வதேச சேமிப்பு தினத்தை முன்னிட்டு‘ஸ்கிரிப் பாக்ஸ்’ (Scripbox) நிறுவனம் ‘ஆன்லைன்’ ஆய்வு ஒன்றைநடத்தியுள்ளது.முதலீட்டாளர்களின் நடத்தைமற்றும் உணர்வைப் புரிந்துகொள்வதற்காக ‘வெல்த் & வெல் பீயிங்’என்ற தலைப்பில் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வில் 25 முதல் 55 வயது வரையான ஆண் - பெண்உட்பட மொத்தம் 630 பேர் பங்கேற்றநிலையில், அதன் முடிவுகள் தற் போது வெளியிடப்பட்டு உள்ளன.

இதில், 90 சதவிகித இந்தியர்கள் நிதி ஆரோக்கியம் அவர்களின்நல்வாழ்வில் ஆழமான தாக் கத்தை ஏற்படுத்துகிறது என்பதைஒப்புக்கொண்டாலும், அவர்களில்பெரும்பாலானோர் சேமிப்பில்அதிகக் கவனம் செலுத்துவதில்லை என்று தெரியவந்துள்ளது.சுமார் 50 சதவிகிதத்தினர் தங்களது சம்பளப் பணத்தில் 0 முதல் 20 சதவிகிதம் வரையிலும், 20 சதவிகிதம் பேர், 20 முதல் 30 சதவிகிதம் வரையும் மட்டுமே சேமிப்பதாகதெரிவித்துள்ளனர். ஆண் - பெண் ஒப்பீட்டில் பார்த்தால் பெரும்பாலான ஆண்கள்எல்ஐசி போன்ற ஆயுள் காப்பீடுகளிலும், மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடுசெய்வதாகவும். 35 வயதுக்குக் குறைவான பலர், தங்களது சம்பளப் பணத்தில் பெரும் தொகையை தங்களது வங்கிக் கணக்கிலேயே வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். அதேநேரம், 35 வயதுக்குமேற்பட்டவர்கள் அந்தப் பணத்தை முதலீடு போன்றவற்றுக்குப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.குழந்தைகளின் கல்வி மற்றும்ஓய்வுக் காலத்திற்கான அவசர நிதியை உருவாக்குதில், ஆண்கள்பெண்கள் இருவருமே முன்னுரிமை அளித்தாலும், ஆண்கள் அதிகபட்சமாக (47 சதவிகிதம் பேர்) ஓய்வூதியத்திற்கான முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அதே நேரத்தில் பெரும் பான்மையான பெண்கள் (55 சதவிகிதம் பேர்), தங்கள் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றனர் என்று தெரியவந் துள்ளதுஒட்டுமொத்தமாக இருவருமே ஓய்வூதியத்திற்கான சேமிப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகஇல்லை. ஏனைய செலவினங் களால், 56 சதவிகிதம் பேர் ஓய்வூதிய சேமிப்பில் தீவிரமாக முதலீடுசெய்யவில்லை என்று ஸ்கிரிப் பாக்ஸ் கூறியுள்ளது.