புதுதில்லி:
உலகில் பசிக்கொடுமை நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியாபடுமோசமான இடத்தில் இருப்பது, உலகப் பட்டினிக் குறியீடு (Global Hunger Index Rank - GHI) அறிக்கைமூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்குக் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி அவர்கள் வீணடிக்கப்படுவதாக உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கை தெரிவித்துள்ளது. 2015-19 காலக்கட்டத் தில் இது படுமோசமான நிலைக்குசென்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உலகப் பட்டினிக் குறியீடு (GlobalHunger Index Rank - GHI) என்பது,உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் பசியை விரிவாக அளவிட மற்றும் கண்காணிக்கவடிவமைக்கப்பட்ட ஒரு ஏற்பாடு ஆகும். ஐக்கிய நாடுகள் அவை மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தரவுகளைக் கொண்டு, உலகப் பட்டினிக் குறியீடு தயாரிக்கப்படுகிறது.இந்தப் பட்டியலில்தான், இந் தியா தனது அண்டை நாடுகளான பாகிஸ்தான் (88), நேபாளம் (73), வங்கதேசம் (75), இலங்கை (64) மற்றும் மியான்மர் (78) ஆகிய நாடுகளை விடவும் மோசமான இடத்தைப்பெற்றுள்ளது.தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 107 நாடுகளில் இந்தியா94-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 14 சதவிகிதம் பேருக்கு ஊட் டச்சத்து குறைபாடு உள்ளதாகவும், தொடர்ந்து ‘கடுமையான’ பட்டினி நிலவும் நாடுகளின் பிரிவிலேயே இந்தியா தொடர்வதாகவும் ஜிஎச்ஐ ஆய்வு தெரிவித்துள்ளது.தெற்காசியாவில், ஆப்கானிஸ் தான் நாடு மட்டுமே இந்தியாவைக் காட்டிலும் மோசமான இடத்தைப் பிடித்துள்ளது. அந்த நாடு 99-ஆவதுஇடத்தில் உள்ளது. பூடான் பற்றியபுள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை.கடந்த ஆண்டு இதேபட்டியலில், இந்தியா 102-ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், அப்போது தரவரிசைப்படுத்தப்பட்ட நாடுகளின் எண் ணிக்கை 117. நான்கு அளவுகோல்களில் இந்தஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இவற்றில், குழந்தைகளின் ஊட்டச்சத்து விவகாரத்தில் உயரத்துக்கு தகுந்த எடை இல்லாத குறைஊட்டச்சத்து மற்றும் வயதுக்குரிய உயரம் இல்லாத நீண்ட கால ஊட்டச்சத்தின்மைக் குறியீடு இரண்டிலும்இந்தியா மோசமாக உள்ளது.‘சைல்ட் வேஸ்டிங்’ என்று அழைக்கப் படும் குழந்தைகளை வீணடிக்கும் விவகாரத்தில் இந்தியாகடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமாக இருப்பதாகவும், 20 ஆண்டுகளாகவே இதில் முன்னேற்றம் இல்லை என்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த ஆண்டு,குழந்தை வீணடிப்பு விஷயத்தில் 20.8 சதவிகிதமாக இருந்த நிலையில்,அது சற்று மேம்பட்டு 17.3 சதவிகிதத்திற்கு வந்துள்ளது என்றாலும், இதுவும் மோசமான நிலைதான் என்றுகுறிப்பிட்டுள்ளது.ஒரே ஆறுதலான விஷயம், ஐந்து வயதுக்கு உட்பட்ட இறப்புகளைக் குறைப்பதாகும்.
போதிய அளவு கலோரி கிடைக்காதவர்களை 14 சதவிகிதம் என்ற அளவிற்கு இந்தியா கொண்டிருந்தாலும், ஊட்டச்சத்தின்மையால் இறக்கும் குழந்தைகள் விகிதம் மட்டும் இந்தியாவில் மிகக்குறைவாக 3.7 சதவிகிதமாக உள்ளது.உலகப் பட்டினிக் குறியீடு- 2020இன் படி, தரவரிசைப்படுத்தப் பட்ட நாடுகளில் சாட், திமோர்-லெஸ்டே மற்றும் மடகாஸ்கர் ஆகியமூன்று நாடுகள் “ஆபத்தான” பிரிவின் கீழ் வந்துள்ளன. எந்த நாடும் “மிகவும் ஆபத்தான” நாடுகள் பிரிவில் வரவில்லை. இந்த அறிக்கை கோவிட்-19 தாக் கத்தை கணக்கில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.“2030-ஆம் ஆண்டில் பட்டினியை பூஜ்ஜியமாக்கும் நீடித்த வளர்ச்சிஇலக்கை நோக்கி உலக நாடுகள் செல்லவில்லை. தற்போதைய நிலவரப்படியே போனால் 37 நாடுகள் பசியைக் குறைக்கும் விகிதத்தில் மேலும் பின்னடைவே காணும். கொரோனா பெருந்தொற் றானது, பட்டினிக் குறியீட்டில் வளரும், ஏழை நாடுகளை மேலும் கீழ்நிலைக்கே தள்ள வாய்ப்பு என்பதால், நம் உணவுப் பாதுகாப்பு முறைகள் பட்டினியை முற்றிலும் ஒழிக்க, பூஜ்ஜியமாக்க போதாதவையாக உள்ளன” என்றும் பட்டினிக் குறியீடு அறிக்கை, உலக நாடுகளை எச்சரித்துள்ளது.