tamilnadu

img

இந்தியாவில் கேள்விக்குறியாகும் நீதித் துறையின் சுதந்திரம்!

சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!

புதுதில்லி, மார்ச் 13 - “தில்லி வன்முறையில் 35 உயிர்கள் போயிருக்கும் நிலையில், அதற்கு காரண மானவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்; இன்னும் எத்தனை உயிர்களை இழந்தால் எப்.ஐ.ஆர். பதிவு செய்வீர்கள்; நகரமே பற்றி எரிந்த பிறகுதான் எப்ஐஆர் பதிவு செய்யப்படுமா?” என்று காவல்துறை க்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியவர் நீதிபதி முரளிதர்.  வன்முறையைத் தூண்டிய பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா, அபே வர்மா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர். பதிவுசெய்ய வேண்டும் என அவர் கூறினார். ஆனால், இந்த உத்தரவைப் பிறப்பித்த பிப்ரவரி 26  அன்று, நள்ளிரவில் நீதிபதி எஸ். முரளிதர், அவசர அவசரமாக பஞ்சாப் - ஹரியானா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  அப்போதே, இது மத்திய பாஜக அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று விமர்சனங்கள் எழுந்தன. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட நீதித்துறை வல்லுநர்கள் பலரும் இந்த பணியிட மாற்றத்தை ‘நீதித்துறையை மிரட்டும் போக்கு’ என்று கண்டித்தனர்.

இந்நிலையில், நீதிபதி முரளிதர் இட மாற்ற நடவடிக்கைக்கு சர்வதேச வழக்கறி ஞர்கள் சங்கத்தின் மனித உரிமை அமைப்பும் (The International Bar Association’s Human Rights Institute -IBAHRI) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர் பாக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த்திற்கு கடிதம் ஒன்றை அந்த அமைப்பு எழுதியுள்ளது. அதில் “நீதிபதி ஒருவர் தன் சுதந்திரக் குரலை பயன்படுத்துவதற்கு, அச்சுறுத்தல் இருக்கக் கூடாது; ஆனால், நீதிபதி எஸ். முரளிதரின் வழக்கத்துக்கு மாறான இந்த பணியிட மாற்றம் அதுவும் சமூக அமைதி  குலைந்த நேரத்தில் நடைபெற்று இருப்ப தானது, இந்தியாவில் நீதித்துறையின் தனித்தன்மை குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளது. மேலும், “பிரச்சனைகளுக்கு அரசை பொறுப்பேற்கச் செய்ய நீதித்துறைக்கு இருக்கும் உரிமை சட்டத்தின் அடிப்படை யில் ஆனதாகும்” என்று குறிப்பிட்டுள்ள சர்வ தேச வழங்கறிஞர்கள் சங்கம், “முரளிதர் பணி யிட மாற்றத்திற்கு எதிராக குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.