tamilnadu

img

இந்தியாவில் ஒரே  நாளில் 55,079 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 55079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை  தாண்டி உள்ளது. மொத்தம் 16,38,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  779 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனா  தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 10,57,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய சூழலில்  5,45,318 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.