“எங்கள் சித்தாந்தம், பாஜக சித்தாந்தத்திற்கு நேர் எதிரானது. எந்தக் காலகட்டத்திலும் வகுப்பு வாத, சாதி மற்றும் முதலாளித்துவ சித்தாந்தங்களைக் கொண்டவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க முடியாது. அத்தகைய கட்சிகளுடன் நட்பு கொள்வதை விட அரசியலில் இருந்து நான் சந்நியாசம் பெற்று விலகிவிடுவேன்” என்று மாயாவதி கூறியுள்ளார்.