புதுதில்லி:
முகநூல் (face book) நிறுவனத்தின் இந்தியாவுக்கான பொதுக்கொள்கை பிரிவு இயக்குநர் அங்கி தாஸ், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் விசாரணைக்கு ஆஜரான நான்கு நாட்களில் அவரது இந்த பதவி விலகல் அரங்கேறியுள்ளது.
அங்கி தாஸின் பதவி விலகல் தொடர்பாக முகநூல் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண் இயக்குநர் அஜித் மோகன் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பொதுப்பணியில் உள்ள தனது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தமது பொறுப்பில் இருந்து அங்கி விலகியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் 14 அன்று, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, ‘டைம்’ இதழ் ஆகியவை, இந்தியாவில் முகநூல் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக செய்திக் கட்டுரைகளை வெளியிட்டன. அதில்,இந்தியாவின் ஆளும் பாஜக கட்சியினர்பதிவிடும் மதப்பாகுபாடு மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள் மீது முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுப்பது இல்லை; அந்த கருத்துக்களை நீக்குவது இல்லை குற்றம்சாட்டப் பட்டிருந்தது.
தில்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே, தெலுங்கானாவைச் சேர்ந்தராஜா சிங் ஆகியோரின் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பான ஆதாரங்களை யும் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை வெளியிட்டது.எல்லாவற்றுக்கும் மேலாக, முகநூல் நிறுவனத்தின் இந்த செயல்பாடுகளின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியாவுக்கான பொதுக்கொள்கை வகுப்பாளராக இருக்கும் அங்கி தாஸ் என்பவர்தான் காரணம் என்பதையும் கண்டுபிடித்துக் கூறியது.பாஜக ஆதரவாளரான அங்கிதாஸ்,திட்டமிட்டே வெறுப்புப் பிரச்சாரங் களுக்கு இடம் தந்ததாகவும், பாஜகவினரின்பதிவுகளை நீக்கக் கூடாது என்று முகநூல் ஊழியர்களுக்கு உத்தரவிட்ட தாகவும் குறிப்பிட்டது.
2012 அக்டோபரில், குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி, பாஜக-வினருக்கு அங்கி தாஸ், ஊடகப் பிரச்சாரம் குறித்து பயிற்சி அளித்ததையும், பின்னர் அது குறித்து “குஜராத் மாநிலத்தில் நமது பிரச்சாரம் வெற்றி” என்று அங்கி தாஸ் பதிவிட்டிருந்ததையும் ‘வால் ஸ்டிரீட்’ அம்பலப்படுத்தியது.2014 பொதுத்தேர்தலில் நரேந்திரமோடியும், பாஜகவும் வெற்றி பெறுவதற்கு முந்தைய நாள், “அவருடைய (மோடியின்) சமூக ஊடகப் பிரச்சாரத்திற்காக நாம் நெருப்பைப் பற்ற வைத்தோம். அதற்குப் பிறகு நடந்தவை அனைத்தும் நிச்சயம் வரலாறு” என்று அங்கிதாஸ் மகிழ்ச்சி பொங்க பதிவிட்ட கருத்தையும் “சமூக ஊடக செல்வாக்கில் மோடியை காங்கிரசோடு ஒப்பிடுவது தவறு; அது மோடியை சிறுமைப்படுத்துவது” என்று அங்கி தாஸ் கூறி யிருந்ததையும் பகிரங்கப்படுத்தியது.
இவை இந்தியாவில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. முகநூல் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர் பெர்க்-கிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடிதம் எழுதினர். அங்கி தாஸின் ஒருதலைப்பட்ச செயல்பாடுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தனர்.இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, 5-க்கும் அதிகமான முறை,அங்கி தாஸ் மற்றும் முகநூல் நிறு வனத்தின் ஊழியர்களை அழைத்து, விசாரணை நடத்தி வந்தது. கடந்த வாரம்கூட நாடாளுமன்ற கூட்டுக் குழு, அங்கி தாஸிடம் விசாரணை நடத்தியது. அவரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பி இருந்தது. இந்நிலையில்தான், அங்கி தாஸ் (49) முகநூல் நிறுவனத்தில், தான்வகித்து வந்த பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.“எனது தனிப்பட்ட பொது நோக்கங்களை எட்டும் வகையில் தற்போது முகநூல் நிறுவனப் பொறுப்பை துறக்கிறேன். இந்தியாவில் சமூக ஊடக நிறுவனத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு எழுதிய ராஜினாமா கடி தத்தில் அங்கி தாஸ் குறிப்பிட்டுள்ளார்.