tamilnadu

img

அமித்ஷாவின் அடியாள்தான் மகாராஷ்டிர ஆளுநர்...

புதுதில்லி:
சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியால் புரட்டிப் போடப்பட்டுள்ளது; அரசியலமைப்பு சட்டம் வகுத்த கடமையை செய்யாமல், அமித் ஷாவின் அடியாளைப் போல அவர் செயல்பட்டிருக்கிறார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், பாஜக அரசு மகாராஷ்டிரா-வில் பொறுப்பேற்றது குறித்து 10 கேள்விகளையும் ரன்தீப் சிங் எழுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ஆட்சி மகாராஷ்டிராவில் நீக்கப்பட வேண்டும் என்றும், புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு எப்போது முடிவுசெய்தது? குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்குவது தொடர்பாக மத்தியஅமைச்சரவைக் கூட்டம் எப்போது நடைபெற்றது? அதில் யார் பங்கேற்றார்கள்? குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் யார் கூறியது? மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை ரத்து செய்யவேண்டும் என்று எந்த நேரத்தில் மத்தியஅமைச்சரவை ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது? அந்த கடிதத்தை ஆளுநர் எப்போது ஏற்றுக் கொண்டார்?பதவியேற்க வருமாறு தேவேந்திர பட்னாவீசுக்கும், அஜித் பவாருக்கும் ஆளுநர் கோஷ்யாரி எப்போது அழைப்பு விடுத்தார்? தேவேந்திர பட்னாவீசுக்கு ஆதரவாக எத்தனை பாஜக -தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்ளனர்? ஒருமணி நேரத்திற்கு உள்ளாகவே, எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் சரிபார்த்து விட்டாரா?

ஒரேயொரு தனியார் டிவி சேனலை தவிர்த்து அரசின் தூர்தர்ஷன் சேனலோ, மற்ற மீடியாக்களோ, குடிமக்களோ, அவ்வளவு ஏன், மகாராஷ்டிராவின் தலைமை நீதிபதி கூடபதவியேற்புக்கு அழைக்கப்படவில்லையே.. என்ன காரணம்? உறுதிமொழி ஏற்பு நடைபெற்ற போதிலும், எப்போது பட்னாவீஸ் அரசு அமைப்பார்என்பது குறித்து ஆளுநர் ஏன் எதுவும் சொல்லவில்லை?இவ்வாறு சுர்ஜேவாலா கேள்விகளை எழுப்பியுள்ளார்.

;