அரியானாவில் டீக்கடைக்காரருக்கு ரூ.51 கோடி கடன் பாக்கி உள்ளது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் குருஷேத்ராவைச் சேர்ந்த ராஜ்குமார் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அரியானாவில் கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் ராஜ்குமார் டீக்கடை மூடப்பட்டிருந்தது. இதனால் ராஜ்குமார் மீண்டும் டீக்கடை நடத்த ரூ.50 ஆயிரம் கடன் கேட்டு வங்கி ஒன்றிற்கு மனு செய்தார். அப்போது அவரது வங்கி ஆதாரங்களை சரிபார்த்த வங்கி ஊழியர்கள் ரூ.51 கோடி கடன் பாக்கியை கட்டுங்கள் எனக் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் எந்த வங்கியில் நான் ரூ.51 கோடி வாங்கினேன் என எனக்கே தெரியவில்லை என்றார்.