குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடகிழக்கு தில்லியில் உள்ள ஜாப்ராபாத் பகுதியில் குடியுரிமைதிருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது சிஏஏவுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாக கூறி பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டப்பகுதியில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் 3 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் தலைமைக்காவலர் ரத்தன்லால் உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் காவல் ஆணையர் அமித்ஷர்மா மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.