tamilnadu

img

கடவுள் நம்பிக்கையாளர்கள் வரலாற்றைத் திரிக்கக் கூடாது வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் பேச்சு

புதுதில்லி, ஜூன் 16- “ராமனைக் கும்பிடுகிறவர்கள் வால்மீகி ராமாயணத்தை அல்லது வேறெந்த ராமா யணத்தை வேண்டுமானாலும் நம்பட்டும். அது அவர்கள் நம்பிக்கை. ஆனால் தங்கள் நம் பிக்கையை நியாயப்படுத்துவதற்காக, வர லாற்றைத் திரித்திடக்கூடாது” என்று வர லாற்று அறிஞர் பேரா.ரொமிலா தாப்பர் கூறி னார். “அயோத்தி: நம்பிக்கையாளர்களின் நகரம், நம்பிக்கையற்றவர்களின் நகரம்” (Ayodhya:City of Faith, City of Discord) என்ற தலைப்பில் அயோத்தி நகரத்தின் வர லாறு, வலைசிங் என்பவரால் புத்தகமாக வெளி யிடப்பட்டிருக்கிறது.  இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, இந்தி யக் கலாச்சார மன்றத்தின் (Indian Cultural Forum) சார்பில் புதுதில்லியில் வெள்ளிக்கிழ மையன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேரா.ரொமிலா தாப்பர் பேசியதா வது: அயோத்தி கடந்த ஆயிரமாயிரம் ஆண்டு களில் பலவிதமான கடவுள் நம்பிக்கையா ளர்கள் வணங்கும் இடமாக இருந்து வந்தி ருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அது வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்ற இட மாகவும் இருந்து வந்திருக்கிறது. வலைசிங் தன்னுடைய இந்நூலில் சுமார் 3,300 ஆண்டு கால அயோத்தியின் வர லாற்றை விவரித்திருக்கிறார். இந்த 3,300 ஆண்டுகளில் எண்ணற்ற அரசர்கள், முஸ்லீம் மன்னர்கள், துறவிகள் மற்றும் சீர்திருத்த வாதிகள் வாழ்ந்த இடமுமாக அயோத்தி இருந்திருக்கிறது. அத்தகைய அயோத்தி இன்றைய தினம் இந்திய அரசியல் மற்றும் அர சியல் கற்பனையின் மையமாகவும் மாறி யிருக்கிறது. அயோத்தியில் பிறந்ததாகக் கூறப்படும் ராமனின் வரலாறு என்ன? வரலாறு வேறு, கடவுள் நம்பிக்கை வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

இரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்துகொள்வது அவசிய மாகும். வலைசிங் இந்தப் புத்தகத்தில் அயோத்தி பற்றி கடவுள் நம்பிக்கையில் உரு வாகியுள்ள கதையிலிருந்து, உண்மையான வரலாற்றை மிகவும் சிறப்பான முறையில் பிரித்துக் காண்பித்திருக்கிறார்.  அதற்காக அவரை மிகவும் பாராட்டுகிறேன். ஒரு வரலாற்றாசிரியர் என்ற முறையில் ராமன் இங்கே பிறந்தான் என்பதற்கான வர லாற்றுச்சான்று எதுவும் கிடையாது என்ப தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வால்மீகி ராமாயணத்தை பல சமூகத்தி னரும் தமதாக்கிக் கொண்டிருக்கிறார்கள் கேர ளாவில் மாப்பிள்ளை ராமாயணம் என்பது முஸ்லிம்களின் ராமாயணமாகும். அதேபோல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒருவித ராமா யணம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. புத்தமதத்தின் ஜாதகக் கதைகள் பல, வால்மீகி ராமாயணத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இப்படி பல ராமாயணங்கள் உள்ளன. அதில் ஒரு ராமாயணத்தில், ராவணனை லட்சும ணன்தான் கொல்கிறான். பல ராமாயணங்களில் ராவணன் அரக்கன் அல்ல. மாறாக அவனை மனிதனாகத்தான் சித்தரித்திருக்கிறார்கள். இவ்வாறு ராமனைக் குறித்து உள்ள ராமா யணங்களில் ராமனைக் கும்பிடுகிறவர்கள் தாங்கள் விரும்பும் எந்த ராமாயணத்தை வேண்டுமானாலும் நம்பிவிட்டுப் போகட்டும். இது அவர்களின் கடவுள் நம்பிக்கை சம்பந்தப் பட்ட விஷயம். ஆனால் அதற்காக அவர்கள் எப்போதும் வரலாற்றைப் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு பேரா. ரொமிலா தாப்பர் கூறி னார்.              

         (ந.நி.)