புதுதில்லி:
முதலீட்டாளர்கள் சேவை நிறுவனமான ‘மூடிஸ்’ (Moody’s), 2020-ஆம் ஆண்டிற்கான இந்தியாவிற்கான ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை 5.4 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. முன்னதாக, இந்தியாவின் வளர்ச்சி 2020-இல் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று மூடிஸ் கணித்திருந்தது. தற்போது, அதிலிருந்து 1.2 சதவிகிதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளது. இதேபோல 2021-ஆம் ஆண்டில் 6.7 சதவிகிதமாக வளர்ச்சிஇருக்கும் என்று கணித்திருந்ததையும், 5.8 சதவிகிதமாக குறைத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று கூறும் மூடிஸ், நடப்புக் காலாண்டில் பொருளாதார மீட்சிதொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுவது போல், வங்கி அல் லாத நிதி நிறுவனங்களிடமிருந்தும் வங்கிகளிடமிருந்தும் கடன் வறண்டு போனதன் விளைவாக கடந்த ஆண்டு முழுவதும் பொருளாதாரத்தில் கடன் உந்துதல் மோசமடைந்துள்ளது. குறிப்பாக வணிகத்துறையில் கடன் வளர்ச்சிகடுமையான சரிவைச் சந்தித்துள் ளது என்று கூறியுள்ள ‘மூடிஸ்’ இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு, கிராமப்புறமற்றும் நகர்ப்புற உள்நாட்டுத் தேவைக்கு புத்துயிர் அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.“இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்புகளை திருத்தியதற்கு முழுக்க முழுக்க இந்தியா எதிர்கொள்ளும் உள்நாட்டு சவால் களே காரணம்” என்றும் மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.