tamilnadu

img

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்...

தில்லி 
நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி மூளையில் பிரச்சனை காரணமாக கடந்த வாரம் தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மூளையில் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் நேற்று மருத்துவர்கள் அகற்றினர். அறுவை சிகிச்சை பிரச்சனையின்றி நிறைவு பெற்றாதால் பிரணாப் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற பின் செய்யப்பட்ட முழு உடல் பரிசோதனையில் பிரணாப்புக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனால் அவருக்கு நேற்றிலிருந்து (திங்கள்) வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பிரணாப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

;