ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை மூன்றாக பிரித்து சிதைத்துள்ளது மத்திய பாஜக அரசு.மேலும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை பல மாதங்களாக வீட்டுச்சிறையில் வைத்திருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் அரசியல் கட்சிகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த வாரம் 3 தலைவர்களும் சேர்ந்து ஆலோசனை நடத்தினர். இதில், குப்கர் தீர்மானத்தின்படி மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கமுடிவு செய்தனர். இந்நிலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த 19 ஆம் தேதி பரூக்அப்துல்லாவிடம் விசாரணை நடத்தினர்.ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது தொடர்
பாக முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, அமலாக்கப் பிரிவு விசாரணைக்காக புதனன்று நேரில் ஆஜரானார்.