tamilnadu

img

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.347.76 கோடி நன்கொடை

சென்னை:
கொரோனா தடுப்புப் பணிக் காக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா தடுப்பு பணிக்காகமுதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை வந்துள்ளது. கடந்த 5 நாட்களில் ரூ.41.34 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ரூ.20 கோடி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ரூ.5 கோடி நன்கொடையும் வழங்கியுள்ளது.ஒருநாள் ஊதியத்தை தந்த அரசு மற்றும் பொதுத்துறை நிறு வன ஊழியர்கள் அனைவருக்கும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;