tamilnadu

img

தில்லியில் ரோஹினி நீதிமன்றத்தில் தீ விபத்து

தில்லியில் உள்ள ரோஹினி நீதிமன்றத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியின் ரோகினி நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து 9 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள்  தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தீ  விபத்துக்கான காரணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.