tamilnadu

img

பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்.. கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த விவசாயி

டேராடூன், ஏப்.11-உத்தர்கண்ட் மாநில விவசாயி ஒருவர், “பாஜகவுக்கு வாக்கு அளிக்காதீர்கள்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்திலுள்ள டட்கி கிராமத்தைச் சேர்த்தவர் விவசாயி ஈஷ்வர் சந்த் சர்மா.65 வயதான இவர், கடந்த திங்கட்கிழமையன்று விஷம் குடித்துதற்கொலை செய்துகொண்டுள் ளார். உறவினர்கள் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே சர்மா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சர்மாதற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்தகடிதம் ஒன்று, அவரது குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “பாஜகவுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்; ஐந்து ஆண்டுகளாக பாஜக அரசு விவசாயிகளை அழித்துவிட்டது; பாஜகவுக்கு வாக்களித்தால், விவசாயிகள் அனைவரும்விவசாயத்தை விட்டுவிட்டு ‘டீ விற்க’ போக வேண்டிய நிலை வந்துவிடும்” என்று ஈஸ்வர் சர்மா குறிப்பிட்டுள்ளார்.இது தற்போது உத்தர்கண்ட் மாநில விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர்கண்ட் மாநில பாஜக அரசும் அதிர்ச்சியடைந்துள்ளது.கடந்த 2018-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் ஷங்கர் பாவுராவ் சய்ரே என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அவரும், தன் சாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என கடிதம்எழுதி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;