tamilnadu

img

வால்வு பொறுத்திய மாஸ்க்களை பயன்படுத்த வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வால்வு பொருத்திய மாஸ்க்களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குநர் ராஜீவ் கார்க், மாநில சுகாதராத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் சுவாச சுத்திகரிப்பு வால்வுகள் வைத்து தைக்கப்பட்ட N95 மாஸ்க்களை அணிவதால் எவ்வித பயனும் இல்லை என கண்டறியப்பட்பட்டுள்ளது. இந்த மாஸ்க் ஒருவரிடமிருந்து கொரோனா வைரஸ்கள் வெளியேறுவதை தடுக்காது. இதனால் பொதுமக்களும் சுகாதார ஊழியர்களும் தகுந்த மாஸ்க்களை பயன்படுத்த வேண்டும் என்பதை அனைவருக்கும் அறிவுறுத்துங்கள் 
மேலும் துணி மாஸ்க்களை பயன்படுத்தும் முன் உப்பு கலந்த நீர் அல்லது சுடு தண்ணீரில்  ஊற வைத்து சோப்பு போட்டு கழுவி நன்கு காய வைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். அடுத்தவரின் முக்கவசங்களை பயன்படுத்த கூடாது.முகக்கவசம் அணியும் போது வாய் மற்றும் மூக்கை இடைவெளியின்றி மறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.