குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்கி மத்திய பாஜக அரசு அடாவடி
எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
மும்பை,நவ.12- மகாராஷ்டிராவில், ஆட்சி அமைக்க முடியாத ஆத்திரத்தில், குடியரசுத்தலைவர் ஆட்சியை அமலாக்கி பகிரங்கமாக ஜனநா யகப் படுகொலையை அரங்கேற்றி யிருக்கிறது மத்திய பாஜக அரசு. மகாராஷ்டிராவில் அரசு அமைத்திட தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.க்களின் ஆதரவை அளித்திடுமாறு தேசியவாதக் காங் கிரஸ் கட்சிக்கு ஆளுநர் காலக்கெடு கொடுத்திருந்த போதிலும் குடி யரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்த மோடி அரசின் அடாவடித்தனமான செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங் கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆட்சியமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக- சிவசேனா கூட்டணிக்கு 161 இடங்கள் இருந்தன. ஆனால் முதல்வர் பதவி வேண்டும்;சமமான அதிகாரப்பகிர்வு என்பதில் சிவசேனா விடாப்பிடியாக இருந்தது. முதல்வர் பதவியை விட்டுத்தர பாஜக சம்மதிக்காததால் மகாராஷ்டிராவில் ஆட்சி யமைப்பதில் இழுபறி நீடித்தது. சில மாநிலங்களில் வேறு கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் நடத்தி ஆட்சியமைத்த பாஜகவால், மகா ராஷ்டிராவில் சிவசேனாவுடன் பேரம் பேசவோ, அக்கட்சி எம்எல்ஏக் களை விலைக்கு வாங்கவோ முடிய வில்லை. இதனால் பாஜக ஆட்சி யமைக்க முடியாமல் தோல்வி யடைந்தது. ஆட்சியமைப்பதில் பாஜகவின் ‘ராஜதந்திரிகளாக’ சித்தரிக்கப்பட்ட மோடி, அமித்ஷாவிற்கு மிகப்பெரும் அடியாக மகாராஷ்டிரா அனுபவம் அமைந்துவிட்டது.
இந்நிலையில், முதல்வராக இருந்த பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் வேறுவழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் மறு நாள் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி, ஆட்சியமைக்க வருமாறு பாஜகவிற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிஅமைக்காது என்று கட்சியின் மாநிலத் தலைவர் அறிவித்தார். பின்னர் இரண்டாவது பெரிய கட்சி யான சிவசேனாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். சிவசேனா, 3 நாட்கள் அவகாசம்கேட்டது. ஆனால் ஆளுநர் அதை நிராகரித்து விட்டார். இதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். நவம்பர் 12 செவ்வாய்க்கிழமையன்று இரவு 8.30 மணிக்குள் அரசு அமைத்திட தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல் ஏக்களின் ஆதரவுப் பட்டியலை அளித்திடுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
ஒரு பக்கம் தேசியவாதக் காங் கிரசுக்கு காலக்கெடு நிர்ணயித்து விட்டு, மறுபக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவை யான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை யை எந்த கட்சியாலும் காட்ட இயல வில்லை என்று ஆளுநர், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். ஆளுநர் அனுப்பிய அறிக்கை யில், மகாராஷ்டிராவில் அரசியல் சாசனப்படி ஆட்சி அமைக்க முடி யாத சூழல் நிலவுவதாகவும், எனவே அரசியல் சாசனப் பிரிவு 356-இன் படி அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரே சிலுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த பிரதமர் மோடி அவசரமாக மத்திய அமைச்சர வைக் கூட்டத்தை செவ்வாயன்று மாலை கூட்டினார். இதில், மகா ராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு உடனடியாக குடியரசுத் தலை வரும் ஒப்புதல் வழங்கினார். இதனை யடுத்து மகாராஷ்டிராவில் குடியர சுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது.
குடியரசுத் தலைவர் ஆட்சி 6 மாத காலம் வரை இருக்கும் என்றும் அதற்குள் பெரும்பான்மை யை நிரூபித்தால் குடியரசுத் தலை வர் ஆட்சி வாபஸ் வாங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்தியில் உள்ள பாஜக அரசு எவ்விதமான அரசியல் சாசன நெறிமுறைகளுக்கும் உட்பட்டு தனது ஆட்சியை நடத்துவதாக தெரியவில்லை. தொடர்ந்து அனைத்து பிரச்சனைகளிலும் ஒரு சட்டவிரோத அணுகுமுறையையே மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் மகாராஷ்டிரா ஆளுநர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, நவம்பர் 12 இரவு 8.30 மணி வரை கால அவகாசம் அளித்த போதிலும், ஆளுநர் அளித்த அவகாசத்தையும் மீறி, மத்திய அமைச்சரவை அம்மாநிலத்தில் சட்டப்பிரிவு 356 இன்படி குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசிய லமைப்பு சட்டத்திற்கு தொடர்ந்து பெரும் கேடு விளைவித்து வருகிறது.
கர்நாடாகா முன்னாள் முதல்வர் பொம்மை உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் / நாடாளுமன்றத்தில்தான் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று வழங்கியுள்ள தீர்ப்புக்கு மாறாக, சரத்பவார் தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிப்பதற்கு முன்பாகவே, பாஜக மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டு வந்து மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குடியரசுத்தலைவர் ஆட்சியை பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் தனது பெரும்பான்மையை நிரூபிக்க பல்வேறு தகிடுதத்தங்களை மேற்கொண்டு கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா கட்சி முயல்வதாக தெரிகிறது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், ஜனநாயக சக்திகளும், நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்து கண்டனக்குரல் முழங்கிட வேண்டும்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து
உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு
சிவசேனா சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞரு மான கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்தமனுவில், மகாராஷ்ராவில் பெரும்பான்மையைநிரூபிக்க ஆளுநர் போதிய அவகாசம் தரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ளுமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் முறையிடவும் சிவசேனா திட்டமிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
புதுதில்லி, நவ.12- மகாராஷ்டிராவில் மிகவும் அடாவடித்தனமாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மிகவும் அடாவடித்தனமாக அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. மகாராஷ்டிர ஆளுநர் நவம்பர் 12 இரவு (செவ்வாய்க்கிழமை) 8.30 மணி வரையிலும் தேசியவாதக் காங்கிரஸ் கட்சிக்கு அரசு அமைத்திட, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலை அளித்திடுமாறு அக்கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காலக்கெடு கொடுத்திருந்தார். தான் அளித்த அந்தக் காலக் கெடு முடிவதற்கு முன்பே, ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்திட குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்திருக்கிறார்.
வெளிநாட்டுக்குப் பறக்கத் தயாராக இருந்த பிரதமரை வைத்து, மிகவும் அவசரகதியில் கூட்டப்பட்ட மத்திய அமைச்சரவைக் கூட்டம், ஆளுநரின் பரிந்துரையை சரியென்று ஏற்றுக்கொண்டு, மத்திய ஆட்சியை அம்மாநிலத்தில் அமல்படுத்துவதற்காக அதனை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. இவை அனைத்தும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பை நேரடியாக மீறிய செயல்களாகும். அவ்வழக்கின் தீர்ப்பில், அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் சட்டமன்றம்தான் என்பது மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறையைப் பின்பற்றாமலேயே, மத்திய பாஜக அரசு இவ்வாறு நடந்து கொண்டிருப்பது இந்திய அரசமைப்புச் சட்ட ஒழுங்கை நாணயமற்றமுறையில் மீறிய செயலாகும்.
குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பயன்படுத்திக்கொண்டு, பெரும்பான்மையைப் பெறுவதற்காக பாஜக, வேறு பல மாநிலங்களில் ஈடுபட்டதைப்போன்று, இழிவான செயல்களில் ஈடுபடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது மோடி அரசாங்கத்தால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது ஏவப்பட்டுள்ள மற்றுமொரு தாக்குதலாகும். அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் இதனை உறுதியுடன் எதிர்த்திட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.