புதுதில்லி, ஆக.11- “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசாங்கம் மேற்கொண்ட நட வடிக்கையை அம்மாநில மக்கள் வரவேற்கிறார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்படுவது உண்மை யென்றால், பின் ஏன் அங்கே ஊரடங்கு உத்தரவுபிறப்பித்திருக்கிறீர்கள், அதனை ரத்து செய்யுங்கள்,” என்று வலி யுறுத்தி, தில்லிப்பல்கலைக் கழக மாணவர்களும் ஆசிரியர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். புதுதில்லியில் தில்லிப்பல் கலைக் கழகத்தின் வடக்கு வளா கத்தில் பல்கலைக் கழக மாணவர் களும், ஆசிரியர்களும் வியாழன் அன்று திரண்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்திடும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாகப் பெண்களும் கலந்து கொண்டு, “காஷ்மீர் பெண்களே, நாங்கள் உங்கள் பக்கம்” என்று முழக்கமிட்டனர். ஒரு பாஜக எம்எல்ஏ, “இனி நாங்கள் காஷ்மீர் அழகான பெண்களை மணம் செய்துகொள்வோம்” என்று கூறியது தொடர்பாக காஷ்மீர் மாணவி ஒருவர் கூறுகையில், “அவர்கள் எங்கள் விருப்பங் களைக் கொன்றிருக்கின்றனர், அவர்கள் எங்கள் சுயமரி யாதையைக் கொன்றிருக்கின்ற னர்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “பாஜகவினரின் நடவடிக்கையை காஷ்மீர் மக்கள் வரவேற்கிறார்கள் என்று அவர்கள் கூறுவது உண்மையானால் பின் ஏன் அங்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பித் திருக்கிறீர்கள்? பாஜகவினர் அதிகாரப் பசி எடுத்து அலை கிறார்கள்” என்றும் ஆவேசத்துடன் கூறினார். “இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையின் பின்னே ஒரு நிகழ்ச்சிநிரல் இருக்கிறது. நிச்சய மாக அது எந்தவிதத்திலும் நல்ல தாக இல்லை,” என்று ஒரு மாணவி கூறினார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அமைதிவழியில் எதிர்ப்பு
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் படித்துவரும் மாணவர்கள், கடந்த புதன்கிழமையன்று தங்கள் கைகளில் கறுப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து அமைதிக் கிளர்ச்சி நடத்தி யுள்ளார்கள். சுமார் ஆயிரம் காஷ்மீர் மாணவர்கள் இப்பல் கலைக் கழகத்தில் பயின்று வரு கிறார்கள். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள், காஷ்மீரில் உள்ள தங்கள் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையில், “மக்களுடன் கலந்தாலோசனை செய்திடாமல், அவர்களின் விதியை மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருப் போர் தீர்மானித்திட முடியாது,” என்று கூறியிருக்கிறது.
(ந.நி.)