tamilnadu

img

தில்லி: 144 தடை உத்தரவு அமல்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் நோக்கில் தில்லியின் மண்டி ஹவுஸ் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தில்லி மண்டி ஹவுஸ் பகுதியில் திரண்டனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.