tamilnadu

img

ஆதார்-பான் இணைப்புக்கு கெடு

புதுதில்லி, மார்ச் 2- வரும் 31 ஆம் தேதிக்குள் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயலற்றுப் போனதாக அறி விக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பான் எண்ணுடன் ஆதாரை இணைப்ப தற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதை செய்யத் தவறினால் முதல் கட்டமாக பான்  எண் செயலற்றதாக மாற்றப்படும். செயலற்ற தாக பட்டியலிடப்படும் பான் எண்ணை பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று வரு மான வரித்துறை தெரிவித்துள்ளது.  வங்கி பரிவர்த்தனை, சொத்து விற்பனை,  பங்குசந்தை முதலீடு, மியூச்சுவல் பண்ட்கள்  போன்றவற்றில் செயலற்ற பான் எண்ணை பயன்படுத்துவது குற்றம் எனவும் அறி விக்கப்பட்டுள்ளது. செயலற்ற பான் எண்ணை  வைத்திருப்பதும், பான் எண் இல்லாமல் இருப்பதும்  ஒன்று தான் என கூறியுள்ள வரு மானவரித்துறை, ஆதாருடன் இணைத்த பிறகு பான் எண்ணுக்கு உயிர் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

;